கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்யத் தயார்: ரஞ்சன் கோகாய்

இனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஹூஸிஃபா இவ்வாறு தெரிவித்தார்.

News image
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் | கோப்புப் படம்
Updated On :16 செப்டம்பர் 2019, 8:56 am

DIN

நிலவும் சூழ்நிலை குறித்து அறிக்கை அனுப்பிவைக்குமாறு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே அங்குள்ள உயர் நீதிமன்றத்தை அணுக இயலவில்லை என மூத்த வழக்கறிஞர் ஹூஸிஃபா அஹ்மதி தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீரில் சிறுவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக இனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஹூஸிஃபா இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு செல்வதில் தடையிருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். இதில் யார் குறுக்கிடுவது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என்பது மிகப்பெரிய பிரச்னையாகும். 

இதில் நீங்கள் தவறான தகவலை தெரிவித்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான தக்க தண்டனை நிச்சயம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் தலைமை நீதிபதியுடன் பேசத் தயாராக இருப்பதாக  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.