ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிலக்கரி சுரங்க வழக்குகளின் நிலை என்ன? விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :17 செப்டம்பர் 2019, 11:40 pm

DIN


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஏலமுறையில் நிலக்கரி சுரகங்களை ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதிக தொகைக்கு ஏலம் கேட்ட நிறுவனங்களுக்கு பதிலாக குறைந்த விலை கொடுத்த நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ரூ.1,86,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் தேசத்தையே அப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் தொடர்புடைய நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி தன்னார்வ அமைப்பான காமன் காசஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரும் 27-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.