திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கருப்புப் பண மோசடி வழக்கு: டி.கே. சிவகுமார் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமைக்கு (செப். 21) ஒத்திவைக்கப்பட்டது. 

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 1:26 am IST


கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமைக்கு (செப். 21) ஒத்திவைக்கப்பட்டது. 
முன்னதாக அந்த மனு மீது, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் முன்வைத்த வாதம்: 
சிவகுமார் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ரூ.800 கோடி மதிப்பில் சொத்துகள் வாங்குவதற்கு தனக்கு இருக்கும் வருவாய் ஆதாரம் குறித்து அவர் உரிய பதிலளிக்கவில்லை. அவரது வருவாய்க்கும், அதன் பேரில் அவர் வாங்கியதாகக் கூறும் சொத்து மதிப்புக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. 
அவர் முறைகேடான வகையில் வாங்கிய சொத்துகளுக்கு வரி செலுத்துவதன் மூலம், அதை வருமானத்துக்கு உள்பட்ட சொத்தாக முறைப்படுத்த இயலாது. வரி செலுத்தினாலும் அது முறைகேடாக வாங்கப்பட்ட சொத்துதான். 
தன்னை விவசாயியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிவகுமார், கடந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொழிலின் மூலம் ரூ.1.38 கோடி வருவாய் ஈட்டியதாகக் கூறியுள்ளார். 
அந்த வருவாயை முதலீடு செய்து அதன் மூலம் ரூ.800 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக அவர் கூறுவது ஏற்புடையதல்ல. சிவகுமாரை தற்போது ஜாமீனில் விடுவித்தால், இந்த வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களை அவர் கலைத்துவிடுவார் என்று கே.எம். நடராஜ் வாதாடினார். 
சிவகுமார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர், அடுத்த விசாரணையை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். 
காங். பெண் எம்எல்ஏவிடம் விசாரணை: சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ லக்ஷ்மி ஹெப்பல்கரிடமும் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.