சின்மயானந்தா சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பாலியல் புகார் வழக்கில் சின்மயானந்தா சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 
ஷாஜனான்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்தா | நன்றி: ஏஎன்ஐ
ஷாஜனான்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்தா | நன்றி: ஏஎன்ஐ
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் சின்மயானந்துக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த மாணவி சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில், நீதித் துறை நடுவர் கீதிகா சிங் முன்னிலையில் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

அவர் வாக்குமூலம் அளித்த அடுத்த சில மணிநேரத்திலேயே சுவாமி சின்மயானந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவருக்கு எதிராகப் புகார் அளித்த மாணவி மிரட்டல் விடுத்துள்ளார். 

ஷாஜகான்பூரில் கல்லூரி விடுதியில் மாணவி தங்கியிருந்த அறை, சின்மயானந்தின் வீடு ஆகிய இடங்களிலும், மாணவியின் தாயார், ஆண் நண்பர்கள், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பாலியல் புகார் வழக்கில் சின்மயானந்தா சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஷாஜகான்பூரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சின்மயானந்தாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஷாஜனான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com