திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் கிராமத்தை உருவாக்கி வைத்தவர் இவர்!

மூன்று திருமணம் செய்து பதினைந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் நபர் ஒருவர் குறித்த சுவராஸ்ய  தகவல் வெளியாகியுள்ளது.

News image
உ.பியில் பெரிய குடும்பம்
Updated On :23 செப்டம்பர் 2019, 12:16 pm

IANS

லக்கிம்பூர் (உ.பி): மூன்று திருமணம் செய்து பதினைந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் நபர் ஒருவர் குறித்த சுவராஸ்ய  தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் பவுதியன் கலன்  கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷெரிப் (48). விவசாயக் கூலியாக பணியாற்றி வரும் இவர்தான் இதுவரை மூன்று பேரைத்  திருமணம் செய்து, அவர்கள் மூலம் 15 குழந்தைகளைப் பெற்று அந்த மாவட்டத்திலேயே பெரிய குடும்பம் என்ற பெருமையுடன் ஒரே வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.   

இந்நிலையில் தனது பெரிய குடும்பம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

1987-ஆம் ஆண்டு எனக்கு 14 வயதிருக்கும் போது ஜட்டா பேகம் என்பவருடன் எனக்கு முதலில் திருமணம் நடந்தது. அவர்மூலம் மூன்று பையன்களும் ஐந்து பெண்களும் பிறந்தார்கள். பின்னர் 90-களில் நூர் என்பவரைச் சந்தித்து அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு  நான்கு பெண்களும் ஒரு பையனும் பிறந்தார்கள்.

பின்னர் 2000-ஆம் ஆண்டில் தரன்னும் பேகம் என்னும் நேபாளியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்.  அவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனக்கு எல்லா குழந்தைகளின் பெயரும் ஞாபகம் இருக்காது. எனவே தினசரி மாலைகளில் தலைகளை எண்ணி  கணக்கிட்டு அனைவரும் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்வேன்.

இப்படி ஒரே வீட்டில் அனைவரும் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்பது எனக்கு கிடைத்த வரம். பெரும்பாலும் எனகு கூலிக்குப் பதிலாக தானியங்கள் கிடைக்கும். அதை வைத்து குடும்பம் ஓடுகிறது.

குழந்தைகள் என்பது கடவுள் கொடுத்த வரம். எனக்கு இன்னும் அதிக குழந்தைகள் இருந்தால் மிகுந்த சந்தோஷமாக இருப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.