திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதிதாக கண்டறியப்பட்ட பாம்பு வகைக்கு உத்தவ் தாக்கரேயின் மகன் பெயரா..?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்துவரும் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பு இனத்திற்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இளையமகன் தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2019, 9:38 am

DIN

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்துவரும் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பு இனத்திற்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இளையமகன் தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே, தேஜஸ் தாக்கரே என்று இரு மகன்கள் உள்ளனர். ஆதித்யா தாக்கரே கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்துவரும் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பு இனத்திற்கு, தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 தேஜஸ் தாக்கரே கடந்த 2015-ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பூனை பாம்பு என்ற அரியவகை பாம்பினம் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்த ஆய்வு அறிக்கையை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆய்வு நடத்தி பூனை பாம்பு இனம் இருப்பதை உறுதி செய்தனர். இந்த பாம்பு மரத்தவளை மற்றும் அதன் முட்டைகளை தின்னும் அரியவகை உயிரினம் ஆகும். இதன் மேல் பகுதியில் புலி போன்ற வரிகள் இருக்கும். இந்த பாம்பு இனத்துக்கு ‘‘தாக்கரேஸ் பூனை பாம்பு'' என பெயரிட்டு உள்ளனர்.

அதாவது தேஜஸ் தாக்கரே இந்த பாம்பினத்தை கண்டுபிடித்ததற்காக அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாம்பின் அறிவியல் பெயர் ‘போய்கா தாக்கரேயி' ஆகும். இரவு நேரத்தில் மட்டுமே தனது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்து இரை தேடக்கூடிய இந்த பாம்பு, விஷம் அற்றவை என்று அறியப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.