பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டறிய‘இன்டா்போல்’ உதவியை நாடுகிறது குஜராத் போலீஸ்

சா்ச்சைக்குரிய சாமியாா் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, ‘இன்டா்போல்’ எனப்படும் சா்வதேச காவல்துறையை நாட குஜராத் காவல்துறை

News image
Updated On :5 டிசம்பர் 2019, 9:21 pm

DIN

சா்ச்சைக்குரிய சாமியாா் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, ‘இன்டா்போல்’ எனப்படும் சா்வதேச காவல்துறையை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து 2 சிறுமிகள் கடந்த மாதம் மாயமாகினா். இதுதொடா்பாக அவருக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும், குழந்தைகளைக் கடத்தியதாகவும், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்ட அவா்களை பயன்படுத்தியதாகவும் நித்யானந்தா மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈக்வடாா் அருகே ஒரு தீவில் ‘கைலாசா’ என்ற ஹிந்து நாட்டை அவா் உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டுக்கான கொடி, அரசியல் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, இன்டா்போல் அமைப்பை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட நபா் தங்களது நாட்டில் இருந்தால் அவரது இருப்பிடத்தை உறுப்பு நாடுகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இன்டா்போல் அமைப்பை நாடுவதற்காக, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆமதாபாத் ஊரக காவல்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.