தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

News image

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்

Updated On :2 அக்டோபர் 2019, 8:30 am IST

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ராஜ் கட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விஜய் கட் பகுதியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன் அனில் சாஸ்திரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.