ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் தனிமை வார்டில் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

தற்கொலை

Updated On :2 ஏப்ரல் 2020, 11:29 am

ஷாம்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2032 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 58 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , ‘ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இன்னும் அவரது கரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.