துபை பயணி மூலம் கரோனா தொற்றிய ஓட்டுநர் வீடு திரும்பினார்

துபையில் இருந்து வந்த பயணியை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த போது, அவர் மூலம் கரோனா தொற்று பாதித்த கார் ஓட்டுநர், பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
துபை பயணி மூலம் கரோனா தொற்றிய ஓட்டுநர் வீடு திரும்பினார்
Updated on
1 min read

துபையில் இருந்து வந்த பயணியை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த போது, அவர் மூலம் கரோனா தொற்று பாதித்த வாடகை கார் ஓட்டுநர், பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உபர் கால்டாக்ஸி ஓட்டுநர் பூரண குணம் அடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

துபையில் இருந்து வந்த அந்தப் பயணி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com