திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பிரியாணி செய்து தெரு நாய்களுக்கு வழங்கும் ஹைதராபாத் இளைஞர்

சுயதொழில் செய்து வரும் இளைஞர் ஒருவர் தன் கையால் பிரியாணியை சமைத்து வந்து தெருவோர நாய்களுக்கு அளித்து மகத்தான சேவையாற்றி வருகிறார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 8:13 am

ஹைதராபாத்: சுயதொழில் செய்து வரும் இளைஞர் ஒருவர் தன் கையால் பிரியாணியை சமைத்து வந்து தெருவோர நாய்களுக்கு அளித்து மகத்தான சேவையாற்றி வருகிறார்.

ஹைதராபாத்தில் ஆனந்த் நகர் காலணியைச் சேர்ந்த கல்யாண் குமார், தினந்தோறும் வீட்டிலேயே பிரியாணி செய்து தெருவோர நாய்களுக்கு வழங்கி வருகிறார். தினமும் 10 கிலோ அரிசி மற்றும் 8 கிலோ கோழிக்கறியை வாங்கி வந்து வீட்டிலேயே பிரியாணி செய்கிறார். அதனை தன் கையாலேயே நாய்களுக்கு வழங்குகிறார். இவருடன் நண்பர்களும் கைகோர்த்து, தெருத் தெருவாகச் சென்று நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் மருத்துவமனை வாசல்களில் இருந்த மனிதர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வந்தேன். அப்போதுதான் பலரும் உணவு மற்றும் தண்ணீரை வீணடிப்பதைப் பார்த்தேன். அதனால் விலங்குகளுக்கு உணவளிக்க முடிவு செய்தேன் என்கிறார் உற்சாகமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.