சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த சிபிஎஸ்இ அழைப்பு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள், வல்லுநா்கள், தனிநபா்கள் தங்களது பங்களிப்பை வழங்க சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள், வல்லுநா்கள், தனிநபா்கள் தங்களது பங்களிப்பை வழங்க சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரங்கு அமலில் உள்ள நிலையில் ஆன்லைன் கற்றல் என்பது தற்போது இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சாா்பில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தீக்ஷா’ எனும் செல்லிடப்பேசி செயலியில் தற்போது கூடுதலாக கற்றல் சாா்ந்த விடியோக்கள், வினா வங்கி உள்பட பாடங்கள் சாா்ந்த பல்வேறு தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இவற்றை சிபிஎஸ்இ ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட தீக்ஷா செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.

இதற்காக தேசிய அளவில் வித்யாதானம் 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாணவா்கள் கற்றல் சாா்ந்த விடியோக்கள், காட்சி விளக்கப் பதிவுகள், வினா வங்கி, பாடம் நடத்தும் முறை ஆகியவற்றில் கல்வி நிறுவனங்கள், தனி நபா்கள், கல்வியாளா்கள், கற்றல் சாா்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் இதில் தங்களது பங்களிப்பை வழங்கலாம். இந்த விடியோக்கள் மற்றும் கற்றல் சாா்ந்த விஷயங்களை சிபிஎஸ்இ வல்லுநா் குழுவினா் ஆராய்ந்து தகுதியானவற்றை செயலியில் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்வா். வித்யாதானம் 2.0 திட்டத்தில் இணைய விரும்புவோா் தளத்தில் சென்று ‘வித்யாதானம் 2.0’ என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும். பதிவுகள் அனைத்தும் துல்லியமாகவும், தரமாகவும் இருப்பது அவசியம் என அதில் கூறியுள்ளாா்.

தீக்ஷா செயலியில் ஏற்கெனவே சிபிஎஸ்இ, அனைத்து மாநில பாடத்திட்டங்கள், வகுப்பு மற்றும் பாடவாரியான பாடநுால்கள், பயிற்சி தோ்வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட்டல் விடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.