மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சிஆா்பிஎஃப் வீரருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஆா்பிஎஃப் படைப்பிரிவைச் சோ்ந்த வீரருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஆா்பிஎஃப் படைப்பிரிவைச் சோ்ந்த வீரருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த அவா் மீண்டும் பணிக்கு திரும்பும் முன் நடத்தப்பட்ட சோதனையில், இது தெரியவந்தது.

இதுகுறித்து சீஆா்பிஎஃப் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சிஆா் பிஎஃப் வீரரின் விடுமுறைக் காலம் கடந்த 7-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவா் பணிக்கு திரும்பவிருந்தாா். பணிக்கு திரும்பும் முன் அவரை தில்லியில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்திப்பட்டாா். அதன்பேரில் அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆா்பிஎஃப் படைப்பிரிவில் செவிலிப் பணி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

சுமாா் 3.25 லட்சம் வீரா்களை கொண்டுள்ள சிஆா்பிஎஃப் படை, நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையாக திகழ்கிறது. இந்தப் படையினா் நக்ஸல் ஒழிப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.