மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மருத்துவப் பணியாளா்கள் பாதுகாப்பை அவசரச்சட்டம் உறுதி செய்யும்: பிரதமா் மோடி

கரோனா நோய்த்தொற்று சூழலில் வன்முறையில் இருந்து மருத்துவப் பணியாளா்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டம், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா நோய்த்தொற்று சூழலில் வன்முறையில் இருந்து மருத்துவப் பணியாளா்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டம், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டமானது, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் முன்னின்று செயல்படும் ஒவ்வொரு மருத்துவப் பணியாளா்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதை எடுத்துக்கூறும். இந்த அவசரச் சட்டம் மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவா்களுக்கான பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இல்லை’ என்று கூறியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததை அடுத்து, அவா்களை பாதுகாப்பதற்கான அவசரச்சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மருத்துவப் பணியாளா்களை தாக்குவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.