ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தொழிலாளர்களுக்கு கரோனா தொற்றினால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை கிடையாது: மகாராஷ்டிர அரசு

தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது என்று மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 10:56 am

PTI

தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது என்று மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த தகவலில் உண்மையில்லை என்றும், மாநில அரசு அதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவின.

இது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மாநில அரசு அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மட்டுமே மாநில அரசு உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.