எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தானில் “ஜெய் ஸ்ரீ ராம்” கூறக்கோரி இஸ்லாமியரைத் தாக்கிய இருவர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறக்கோரி இஸ்லாமியர்களை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
இஸ்லாமியரைத் தாக்கிய இருவர் கைது
Updated On :9 ஆகஸ்ட் 2020, 7:36 am

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறக்கோரி இஸ்லாமியர்களை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் 52 வயதான கப்பர் அஹ்மத் கச்சா ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார்.கடந்த வெள்ளிகிழமையன்று அவரிடம் அடையாளம் தெரியாத இருவர் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்றும் மோடி ஜிந்தாபாத் என்றும் கூறக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த கச்சாவை அவர்கள் பலமாகத் தாக்கி அவரிடம் இருந்த பணத்தையும் திருடியதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக காவல்துறையிடம் கச்சா புகாரளித்த பின் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தாக்குதலால் கச்சாவின் பற்கள் உடைந்தன. மேலும் கண் வீங்கியும், கன்னத்தில் காயங்களும் காணப்பட்டன.

இது குறித்துப் பேசிய "வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், என் மாமா பயணிகளை அருகிலுள்ள கிராமத்திற்கு இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஒரு காரில் இருந்த இரண்டு பேர் அவரைத் தடுத்து புகையிலை கேட்டார்கள். இருப்பினும், அவர்கள் என் மாமா வழங்கிய புகையிலை வாங்க மறுத்து, மோடி ஜிந்தாபாத் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கூறும்படி கட்டாயப்படுத்தினார்கள். ”என்று கச்சாவாவின் மருமகன் ஷாஹித் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.