சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுற்றுச்சூழல் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :13 ஆகஸ்ட் 2020, 5:57 am

DIN

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு  எதிர்கட்சித் தலைவர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 

'நாம் இயற்கையை பாதுகாத்தால்தான் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்'

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, இது வரைவு அறிக்கைதான், பொதுமக்கள் கருத்துக்காகவே வெளியிடப்பட்டுள்ளது, இது இறுதி அறிக்கை அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும்,  அறிக்கை மீதான தங்களது கருத்துகளை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.