எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தான்: ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி, 2 பேர் மாயம்

ராஜஸ்தானில் இருவேறு சம்பவங்களில் சோத்ரா ஆற்றில் மூழ்கி இரண்டு பேர் பலியானார்கள். 

News image
கோப்புப் படம்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 10:51 am

DIN

ராஜஸ்தானில் இருவேறு சம்பவங்களில் சோத்ரா ஆற்றில் மூழ்கி இரண்டு பேர் பலியானார்கள். 

ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் பருவ மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டோங்க் மாவட்டத்தில் பாயும் சோத்ரா ஆற்றில் வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரண்டு பேர் பைக் ஒன்றில் ஆற்றின் பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த பைக் ஆற்றில் வழுக்கி விழுந்தது. இதில் பைக்கில் சென்ற இருவரும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். 

மாயமானவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மற்றொரு சம்பவத்தில், நபர் ஒருவர் தனது வயலில் இருந்து திரும்பியபோது அவரது ஆடு ஒன்று ஆற்றில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்டை மீட்க அவர் ஆற்று நீரில் குதித்தார். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த அவரது மகனும் தனது தந்தையையும் ஆட்டையும் மீட்க குதித்தார். இதில் தந்தை காப்பாற்றப்பட்ட போதிலும், அவரது மகனை காப்பாற்ற முடியவில்லை. 

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், "சனிக்கிழமை மாலை நான்கு பேர் நிரம்பி வழியும் சோத்ரா ஆற்றில் மூழ்கிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கிராமவாசிகள் இருவரை மீட்ட நிலையிலும், மற்ற இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.