மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னிப்புக் கேட்க மறுத்ததை பரிசீலிக்க பூஷணுக்கு அவகாசம்: உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்ச நீதிமன்றம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 11:58 am

PTI


புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது வழக்குரைஞர்களுடன் கலந்தாலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்பது குறித்து முடிவு செய்வதாக பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் கூறியுள்ளார்.

வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் பூஷணுக்கு, எந்த தண்டனையும் வழங்கப்படக் கூடாது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதத்தை முன் வைத்தார்.

ஆனால், நீதித் துறையை அவமதித்து தான் இட்ட சுட்டுரைப் பதிவுகளுக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டை பிரசாந்த் பூஷண் மாற்றிக் கொள்ளாவிட்டால், வேணுகோபாலின் கோரிக்கையை பரிசீலனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.

பிரசாந்த் பூஷணின் பேச்சு, தொணி, உள்ளர்த்தம் அனைத்தும் விவகாரத்தை இன்னும் மோசமாக்குகிறது. இது பாதுகாப்பதா அல்லது மோசமானதா என்றும் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவேளை தனது தவறை அவர் உணர்ந்தால், உச்ச நீதிமன்றம் அவருக்கு தாராளமாக கருணை காட்டும், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.