மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேறு அமர்வில் விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றத்தில் பூஷண் மனு தள்ளுபடி

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் மறுஆய்வு மனு விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

News image
பிரசாந்த் பூஷணின் மறுஆய்வு மனு விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றம்: உச்ச நீதிமன்றம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 11:57 am

PTI

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.

இன்று தண்டனை விவரங்களை அறிவிக்க உச்ச நீதிமன்ற அமர்வு கூடியபோது, தண்டனை விவரங்களை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பிரசாந்த் பூஷணின் கோரிக்கையை நிராகரித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குப் பிறகே, இந்த வழக்கில் அளிக்கப்படும் தண்டனை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் பி.ஆர். காவி, கிருஷ்ண முராரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை வேறொரு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று, பிரசாந்த் பூஷண் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் துஷ்யந்த் தாவேவின் கோரிக்கை, "முறையற்ற செயல்" என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யும் வரை, அதற்கான தண்டனை விவரங்களை வெளியிடக்கூடாது என்று கோரி வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.