திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்: மத்திய அமைச்சர் விளக்கம்

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் முயற்சியில் கேரள அரசு தகுதி பெறவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Updated On :21 ஆகஸ்ட் 2020, 6:49 am

DIN

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் பணியில் கேரள அரசு தகுதி பெறவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களை  குறிப்பிட்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட புதன்கிழமை மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.

இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தின் ஆளும் இடதுமுன்னணி அரசு சார்பில் முதல்வர் பினராய் விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் ஒருதலைபட்சமான இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பினராய் விஜயன் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் இதுகுறித்து விவாதிப்பதற்காக வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,  திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் பணியில் கேரள அரசு தகுதி பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏலம் எடுக்கும் நடவடிக்கை வெளிப்படையாகத் தான் செயல்படுத்தப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சர் ஏலம் திறக்கப்பட்டபோது கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்கும் அடுத்த அதானி குழுமத்திற்கும் இடையில் 19.64% வித்தியாசம் இருந்தது என தனது சுட்டுரைப் பதிவில் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.