ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நீட், ஜேஇஇ வேண்டாம்: மத்திய அரசுக்கு திறந்த கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ்

கரோனா பரவி வரும் நிலையில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திறந்த கடிதம் எழுதியுள்ளா

News image

நீட், ஜேஇஇ வேண்டாம்: மத்திய அரசுக்கு திறந்த கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ்

Updated On :27 ஆகஸ்ட் 2020, 2:58 pm IST


லக்னௌ: கரோனா பரவி வரும் நிலையில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திறந்த கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், அடிப்படை இல்லாமல், வேலை நிமித்தமாக வெளியே பொதுமக்கள் வரும் போது தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் வர முடியாதா என்று பாஜக  அடிப்படை இல்லாமல், விளையாட்டுத்தனமாக கேள்வி எழுப்புகிறது. ஆனால், பொதுமக்கள் வேறு வழியே இல்லாமல்தான் பணிக்காக வெளியே வருகிறார்கள். ஆனால், தங்கள் பாதுகாப்புக்காக வீட்டுக்குள்ளேயே இருப்போரையும் தேர்வு மூலமாக மத்திய அரசு வெளியே வர கட்டாயப்படுத்துகிறது.

ஒருவேளை மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவினால், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 - 6-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இந்த தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலையையே எதிர்க்கட்சிகளும் எடுத்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.