ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Updated On :27 ஆகஸ்ட் 2020, 11:25 am

DIN

எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டன. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. 

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, மத்திய அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர். 

இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கூறியதாவது:

ஜே.இ.இ. தேர்வு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டனர். அதேபோன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15.97 லட்சம் மாணவர்களில், நுழைவுச் சீட்டு வெளியிட்ட 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என இது காட்டுகிறது. 

பாதுகாப்பு கருதிஜேஇஇ தேர்வு மையங்கள் 570-லிருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 2,546 ஆக இருந்த நீட் தேர்வு மையங்கள் இப்போது 3,842 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மாணவர்கள் வசதிக்கேற்ப விருப்பமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.