மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார் பெயரில் போலி முகநூல் பக்கத்தைத் தொடங்கி மக்களின் பணத்தை மோசடி செய்த உ.பி. சிறுவன் கைது செய்யப்பட்டான்.

News image

தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது

Updated On :29 ஆகஸ்ட் 2020, 7:46 am

ANI

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார் பெயரில் போலி முகநூல் பக்கத்தைத் தொடங்கி மக்களின் பணத்தை மோசடி செய்த உ.பி. சிறுவன் கைது செய்யப்பட்டான்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி போலி முகநூல் பக்கம் குறித்து காவல்துறைக்கு வந்த புகாரினைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தெலங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினரின் விவரங்களை இணையதளம் மூலம் சேகரித்து, அவரது பெயரில் போலியான முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளான் அந்த சிறுவன். அதில், தனது நண்பரின் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாகவும், பொதுமக்கள் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளான். இவ்வாறு கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.