திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

'கடவுளின் செயல்': நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு ப. சிதம்பரம் கேள்வி

பொருளாதார பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

News image
நிர்மலா சீதாராமனின் 'கடவுளின் செயல்' என்ற கருத்துக்கு சிதம்பரம் கேள்வி
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

PTI


புது தில்லி: பொருளாதார பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

பொருளாதாரப் பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் கடவுளின் தூதரான மத்திய நிதியமைச்சர், பேரிடருக்கு முந்தைய தவறான பொருளாதார மேலாண்மையை எவ்வாறு வர்ணிப்பார் என்று பதிலளிக்க வேண்டும் என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேரிடரால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை கடவுளின் செயல் என்று கூறியதோடு, அது நடப்பு நிதியாண்டியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு குறித்து கருத்துக் கூறியிருக்கும் ப. சிதம்பரம், பேரிடர் ஒருவேளை கடவுளின் செயலாக இருந்தால், 2017 - 18, 2018 - 19, 2019 - 20ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசமான மேலாண்மையை எவ்வாறு வர்ணிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் இருப்பதால் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வரிவருவாய் இழப்பை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பதற்கும் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவையை ஈடுபட்ட மத்திய அரசு இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் இரண்டுமே, ஒட்டுமொத்த பொருளாதாரப் பளுவும் மாநில அரசுகள் மீதே விழும் வகையில் உள்ளது.  இதன் மூலம், அனைத்து விதமான நிதிப் பொறுப்புகளில் இருந்தும் மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.  இது ஒட்டுமொத்த துரோகம் மற்றும் சட்டத்தை வெளிப்படையாகவே மீறுவதற்குச் சமம் என்றும் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.