சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: உ.பி. காங். தலைவர்

குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: உ.பி. காங். தலைவர்காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் கோரி கடிதம் எழுதிய 23 பேரில் ஒருவரான குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 12:27 am

DIN

குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: உ.பி. காங். தலைவர்
காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் கோரி கடிதம் எழுதிய 23 பேரில் ஒருவரான குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் நசீப் பதான். 

இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என, உள்ளிட்ட 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதம் தன்னைக் காயப்படுத்தியதாகவும், ஆனால், இப்போது பிரச்னை முடிந்துவிட்டது என்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறிவிட்டார். அதன் பிறகும் குலாம் நபி ஆசாத் ஊடகங்களுடன் பேசி, அதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். எனவே, கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதால்,
அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக பதான் ஒரு விடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

ஆசாதுக்கு எதிராக  நசீப் பதான் அறிக்கை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. 2017 உத்தர பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த குலாம் நபி ஆசாத் ராஜிநாமா செய்ய வேண்டும் என,  நசீப் பதான் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.