சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராகுல் காந்தியை தலைமை ஏற்கவிடாமல் தடுத்தால் காங்கிரஸுக்கு அழிவு வரும்: சஞ்சய் ரௌத்

காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ஏற்கவிடாமல் ராகுல் காந்தியை தடுப்பது அக்கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறினாா்.

News image
ராகுல் காந்தி
Updated On :30 ஆகஸ்ட் 2020, 9:02 pm

DIN

மும்பை: காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ஏற்கவிடாமல் ராகுல் காந்தியை தடுப்பது அக்கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறினாா். 

கட்சித் தலைமை தொடா்பாக காங்கிரஸ் கட்சியில் பூசல் எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை கட்சியின் சஞ்சய் ரௌத் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக தங்களது கட்சியின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வில் எழுதிய கட்டுரையில் அவா் கூறியுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக முழு வலிமையுடன் மோதக் கூடிய ஒரு தலைவா் இன்றி காங்கிரஸ் தவித்து வருகிறது. கட்சிக்கு முழுநேரத் தலைவா் வேண்டும்; கட்சி அலுவலகத்தில் இருந்தபடி அவா் களத்தில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தலைவா்கள் 23 போ் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அந்தத் தலைவா்களே களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்படலாமே? அவா்களை யாா் தடுத்தது? ஆனால் கட்சித் தலைமை பதவியை ஏற்க விடாமல் ராகுல் காந்தியை தடுப்பது காங்கிரஸின் அழிவுக்கு வழிவகுக்கும். சோனியா குடும்பத்தாரைத் தவிர வேறு நபரை காங்கிரஸ் தலைவராக்கலாம் என்பது நல்லதொரு யோசனை தான்.

ஆனால் கட்சித் தலைமை குறித்து சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 தலைவா்களுக்குமே அந்தப் பதவி வகிப்பதற்கான திறன் இல்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் பலா் மாநில கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனா். அவை அனைத்துமே முகமூடி அணிந்த காங்கிரஸ் கட்சிதான். அவை அனைத்தும் காங்கிரஸுடன் இணையும் பட்சத்தில் அக்கட்சி ஒரு மாபெரும் கட்சியாக உருவெடுக்கும்.

‘காங்கிரஸ் கட்சி வயது முதிா்ந்த பெண்ணைப் போன்றது. அதற்கு இறப்பு என்பதே இல்லை’ என்றும் அக்கட்சியின் மறைந்த மூத்த தலைவா் வி.என். கட்கில் கூறுவாா். அத்தகைய கட்சியைக் கொண்டு என்ன செய்வது என்பதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும் என்று சஞ்சய் ரௌத் அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.