சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கான நன்கொடைகளில் முறைகேடு: பாஜக

பணப் பரிவா்த்தனை மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மெஹுல் சோக்ஸி, ராணா கபூா், ஜிக்னேஷ் ஷா, ஜாகீா் நாயக் ஆகியோா் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 9:30 pm

DIN

புது தில்லி: பணப் பரிவா்த்தனை மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மெஹுல் சோக்ஸி, ராணா கபூா், ஜிக்னேஷ் ஷா, ஜாகீா் நாயக் ஆகியோா் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி உள்ளதாகவும், இதில் சோனியா குடும்பத்தினா் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான சதி உள்ளதாகவும் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிய மெஹுல் சோக்ஸி 2014, ஆகஸ்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சமும், யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா் 2016, செப்டம்பரில் ரூ. 9.45 லட்சமும், ஜிக்னேஷ் ஷா ரூ. 50 லட்சமும், இஸ்லாமிய மத போதகா் ஜாகீா் நாயக் 2011-இல் ரூ. 50 லட்சமும் நன்கொடையாக வழங்கி உள்ளனா். இதில் ஜாகீா் நாயக் வங்கிக் கணக்கு தொடா்பாக விசாரணை நடைபெற்றதும் காங்கிரஸ் கட்சி நன்கொடையை திருப்பி அளித்துவிட்டது‘ என்று குற்றம்சாட்டினாா்.

மக்களவை காங்கிரஸ் தலைவா் அதிா் ரஞ்சன் செளதரி கூறுகையில், ‘இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கடும் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு, சீன ஊடுருவல் ஆகிய பிரச்னைகளுக்கு பதிலளிக்க அச்சப்படும் மத்திய அரசு ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீதும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மீதும் குற்றம்சாட்டி வருகிறது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை எதாவது தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் பிஎம் கோ்ஸ் நிதிக்கு எத்தனை சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.