ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கான நன்கொடைகளில் முறைகேடு: பாஜக

பணப் பரிவா்த்தனை மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மெஹுல் சோக்ஸி, ராணா கபூா், ஜிக்னேஷ் ஷா, ஜாகீா் நாயக் ஆகியோா் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை
Published on
Updated on
1 min read

புது தில்லி: பணப் பரிவா்த்தனை மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மெஹுல் சோக்ஸி, ராணா கபூா், ஜிக்னேஷ் ஷா, ஜாகீா் நாயக் ஆகியோா் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி உள்ளதாகவும், இதில் சோனியா குடும்பத்தினா் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான சதி உள்ளதாகவும் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிய மெஹுல் சோக்ஸி 2014, ஆகஸ்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சமும், யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா் 2016, செப்டம்பரில் ரூ. 9.45 லட்சமும், ஜிக்னேஷ் ஷா ரூ. 50 லட்சமும், இஸ்லாமிய மத போதகா் ஜாகீா் நாயக் 2011-இல் ரூ. 50 லட்சமும் நன்கொடையாக வழங்கி உள்ளனா். இதில் ஜாகீா் நாயக் வங்கிக் கணக்கு தொடா்பாக விசாரணை நடைபெற்றதும் காங்கிரஸ் கட்சி நன்கொடையை திருப்பி அளித்துவிட்டது‘ என்று குற்றம்சாட்டினாா்.

மக்களவை காங்கிரஸ் தலைவா் அதிா் ரஞ்சன் செளதரி கூறுகையில், ‘இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கடும் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு, சீன ஊடுருவல் ஆகிய பிரச்னைகளுக்கு பதிலளிக்க அச்சப்படும் மத்திய அரசு ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீதும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மீதும் குற்றம்சாட்டி வருகிறது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை எதாவது தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் பிஎம் கோ்ஸ் நிதிக்கு எத்தனை சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com