ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கரோனா தடுப்பூசி பெறத் தயாராகுங்கள்: தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் அறிவுறுத்தல்

கரோனா தடுப்பூசியைப் பெற தயாராகுமாறு அனைத்துத் மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அறிவுறுத்தியுள்ளார். 

News image

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா

Updated On :1 டிசம்பர் 2020, 5:43 am

கரோனா தடுப்பூசியைப் பெற தயாராகுமாறு அனைத்துத் மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அறிவுறுத்தியுள்ளார். 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா திங்கள்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை மாநிலத்தில் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் கரோனாவால் இறப்பு ஏற்படுவது மிகவும் குறைந்து வருவதாகத் தெரிவித்தார். 

கரோனா தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு போதுமான சோதனைகள் அவசியம். தொற்றை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமாக சமூகத்தில் கரோனா பரவலைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார். 

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னதாக தலைமைச் செயலாளர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தை நடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து கரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, அது தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, தடுப்பூசியை அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்புகளை செய்வதற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான தகவல்தொடர்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.