திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஹரியாணா முதல்வர் இல்லம் முற்றுகை: இளைஞர் காங்கிரஸார் கைது

ஹரியாணா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.

News image
ஹரியாணா முதல்வர் இல்லம் முற்றுகை: இளைஞர் காங்கிரஸார் கைது (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 6:01 pm

DIN

ஹரியாணா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.

பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பரிந்தர் தில்லோன் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் தடுத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.

இதனைக் கண்டித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் ஹரியாணா முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இதனையொட்டி முதல்வர் இல்லத்திற்கு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே தடுப்புகளை அமைத்து காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும் இளைஞர் காங்கிரஸார் சிலர் தடுப்புகளை மீறி முதல்வர் இல்லத்தை நோக்கி முன்னேறினர்.

அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். விவசாயிகளுக்கு எதிரான ஹரியாணா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் இளைஞர் காங்கிரஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.