உத்தரப் பிரதேசத்தில் காதா தாம் பகுதியில் மணல் லாரி திரும்பும் போது எதிரே வந்த காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தேவிகஞ்சில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று ஷாஜாத்பூருக்கு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் அபிநந்தன் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தார்.
மேலும், காரில் பயணித்த இரண்டு சிறுமிகள் காயங்களுடன் வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து ஏற்படுத்தி லாரி ஓட்டுநர் தப்பித்துச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


