உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: தில்லியில் ரூ.44 கோடி வசூல்

தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ரூ.44 கோடி வசூலாகியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

News image

முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: தில்லியில் இதுவரை ரூ.44 கோடி வசூல் (கோப்புப்படம்)

Updated On :3 டிசம்பர் 2020, 9:27 am

தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ரூ.44 கோடி வசூலாகியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தில்லி அரசு மற்றும் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க தில்லியிலுள்ள 11 மாவட்டங்களிலும் 180க்கும் அதிகமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு சார்பில் 2 லட்சம் அபராத ரசீதுகளுக்கு ரூ. 17 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று காவல்துறையினர் சார்பில் 5 லட்சம் அபராத ரசீதுகளுக்கு ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தில்லியில் கரோனா பரவலை மதிப்பீடு செய்து, இரவு பொதுமுடக்கத்தை நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.