மகாராஷ்டிரத்தில் புதிதாக 5229 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று 5,229 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 18,42,587 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 83,859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் 127 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,599 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,776 பேர் குணமடைந்தனர்.  

இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,10,050ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com