மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடும் பனிப்பொழிவு: மணாலி - லே நெடுஞ்சாலை மூடல்

கடுமையான பனிப்பொழிவு காரணமாக அடல் சுரங்கம் பகுதியில் மணாலி - லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

News image
மணாலி - லே நெடுஞ்சாலை(கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2020, 7:25 am

DIN

கடுமையான பனிப்பொழிவு காரணமாக அடல் சுரங்கம் பகுதியில் மணாலி - லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலைமை சரியாகும்வரை பொதுமக்கள் நெடுஞ்சாலை வழியே பயணிக்க வேண்டாம் என்று ஹிமாசலப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வட மாநிலங்களில் குறிப்பாக ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. 

ஹிமாசலில் பழங்குடிகள் வசிக்கும் லஹால் மற்றும் ஸ்பிட்டி பகுதிகளில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோஹ்தாங் அடல்சுரங்கத்திலிருந்து லஹால் பள்ளத்தாக்கு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இப்பகுதியில் செல்வது ஆபத்தானது என்றும் நிலைமை சரியாகும் வரை மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.