தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விவசாயிகளின் ஏழ்மைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்: சிவராஜ் சிங் செளகான்

விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2020, 7:44 am

DIN


விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் நமது கடவுளைப் போன்றவர்கள். அவர்களது வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம். அதற்கான முயற்சியாக வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை. விவசாயிகளை அவர்கள் திவாலாக்கியதாகக் குறிப்பிட்டார்.

மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். விவசாயிகளும் அவர்களை துக்கியெறிந்துள்ளனர். விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம். விவசாயிகளிடம் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது நலம் விரும்பிபோல் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.