திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்: ஹரியாணா துணை முதல்வர்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். 

News image
துஷ்யந்த் சவுதலா
Updated On :27 ஜனவரி 2024, 6:05 pm

DIN

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாஜக கூட்டணியில் உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சியின் தலைவரும், ஹரியாணா துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். 

'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளுக்கான உறுதிகள் எழுத்துப்பூர்வ வடிவில் மத்திய அரசு வழங்கியுள்ளது. அது விவசாயிகளுக்கு கிடைக்காதபட்சத்தில் நான் எனைத்துப் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, ஹரியாணாவில் பாஜக கூட்டணியில் உள்ள  ஜன்நாயக் ஜனதா கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுமாறும் துஷ்யந்த் சவுதலாவுக்கு கட்சி எம்.எல்.ஏக்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய துஷ்யந்த் சவுதலா இந்த ஏறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை அளித்த நிலையில், அதனை நிராகரித்து விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.