பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கேரளத்தில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: கண்ணூரில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

News image
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.
Updated On :14 டிசம்பர் 2020, 6:31 am

DIN

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

கேரளத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிட்டு அதன்படி,  முதல்கட்டத் தேர்தல் கடந்த 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 10 ஆம் தேதியும் நடைபெற்றது.

முன்னதாக 10 மாவட்டங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 354 உள்ளாட்சி அமைப்புகளில் 6,867 வார்டுகளில் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 10,842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி,  மலப்புரம்-17.11, கோழிக்கோடு-16.76, கண்ணூர்-17.08 மற்றும் காசர்கோடு-16.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை கண்ணூரில் உள்ள செரிக்கால் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்குச்சாவடிகளில் கரோனா  விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வருகிற 16 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.