மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்தல் அதிகரிக்கலாம்: ஆய்வில் தகவல்

அதிகரித்து வரும் காலநிலை மாற்ற நெருக்கடிகளால் 2050ஆம் ஆண்டளவில் தெற்காசிய மக்களில் 6.2 கோடி பேர் தங்களின் வாழிடங்களில் இருந்து புலம்பெயரலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்தல் அதிகரிக்கலாம்: ஆய்வில் தகவல்
Updated On :18 டிசம்பர் 2020, 1:59 pm

DIN

அதிகரித்து வரும் காலநிலை மாற்ற நெருக்கடிகளால் 2050ஆம் ஆண்டளவில் தெற்காசிய மக்களில் 6.2 கோடி பேர் தங்களின் வாழிடங்களில் இருந்து புலம்பெயரலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சூழலியல் பாதிப்புகளால் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க மக்கள் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்தலை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நடப்பாண்டு 1.4 கோடி மக்கள் பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என உலக வங்கியின் கிரவுண்ட்ஸ்வெல் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரையன் ஜோன்ஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்ற பாதிப்புகளால் நீர் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களினால் மக்கள் புலம்பெயர்தலை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"காலநிலை தாக்கங்களினால், தெற்காசியாவில் உள்ள நாடுகள் 2050ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2% ஐ இழக்கக்கூடும் எனவும் கிட்டத்தட்ட 6.2 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து புலம்பெயர்வார்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புலம்பெயர்தலுக்காக மோசமான கடன் வலையில் மக்கள் சிக்க வாய்ப்புள்ள அதேவேளையில் குறைந்த ஊதியத்திற்கு நகரங்களில் அவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாய சூழலில் சிக்குவார்கள் எனவும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.