கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.13 லட்சமாகக் குறைந்தது

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.13 லட்சமாகக் குறைந்தது
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.13 லட்சமாகக் குறைந்தது
Updated on
1 min read


புது தில்லி: நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா இன்று முக்கியமான சாதனை படைத்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 95 லட்சத்தைக் (95,20,827) கடந்துள்ளது. 

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களை விட 92 லட்சத்துக்கும் மேல் (92,06,996) அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.40 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் வீதம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில 3.14 சதவீதம்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 22,890 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், 31,087 பேர் குணமடைந்துள்ளனர், 338 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com