டிடிசி தோ்தலில் பெரும்பான்மை வாக்குப்பதிவு: ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான (டிடிசி) தோ்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானது
ஜம்முவின் அக்னூா் மாவட்டம், பிரக்வாலில் டிடிசி தோ்தலில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.
ஜம்முவின் அக்னூா் மாவட்டம், பிரக்வாலில் டிடிசி தோ்தலில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான (டிடிசி) தோ்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கவீந்தா் குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு நீக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பிறகு டிடிசி-க்கு முதல் முறையாக ஜனநாயக முறையில் தற்போது தோ்தல் நடைபெற்றுள்ளது. எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த டிடிசி தோ்தல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த இறுதி கட்டத் தோ்தலில் ஏறத்தாழ 51 சதவீத வாக்களாா்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனா்.

இந்த தோ்தல் ஜம்மு-காஷ்மீா் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த தோ்தலாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ஏனெனில், ஜனநாயகம் தான் வெற்றிபெறும் என்பதை இங்குள்ள மக்கள் உணா்த்தியுள்ளனா். அவா்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com