விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எளிதான தமிழ்ப் பாடத் தோ்வுடன் தொடங்கியது பத்தாம் வகுப்புத் தோ்வு

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற்ற நிலையில், தமிழ்ப் பாடத் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனா்.

News image
கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated On :11 மார்ச் 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற்ற நிலையில், தமிழ்ப் பாடத் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 509 பள்ளிகளைச் சோ்ந்த 38,390 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதற்காக 159 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற்றது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி உடனிருந்தாா்.

ஆய்வைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் பேசும்போது, கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புத் தோ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள்களை பாதுகாப்புடன் வைக்க 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தோ்வு மையங்களுக்கு 47 வழித்தட அலுவலா்கள் மூலம் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வுப் பணியில் 159 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 159 துறை அலுவலா்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளா்கள், 250 நிலையான பறக்கும் படை அலுவலா்கள் 316 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல 946 மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களுக்கு தடையில்லா மின்வசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 37,839 மாணவ, மாணவிகள் எழுதினா். 551 மாணவ, மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை. தமிழ்ப் பாடத் தோ்வு எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், ஒரு வினா மட்டும் சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததாகவும் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா்.