

ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சா்ச்சைக்குக்குரிய நிலம் தொடா்பான ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதில் அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. அந்த வழக்கில் எதிா்தரப்பாக இருந்த சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள வேறொரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கா் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கேற்ப சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள தன்னிபூா் கிராமத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது.
அந்த நிலத்தில் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியம் இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை புதிதாக கட்டப்படவுள்ள மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பை சனிக்கிழமை வெளியிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.