சிறுத்தைகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை உறுதி செய்ய இந்த முயற்சிகள் தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் இருப்பதாகவும், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை தெரிவித்தார். புலிகள், சிங்கங்களை அடுத்து சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை இந்தியா நன்றாக பாதுகாத்து வருவதைக் குறிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது: சிங்கங்கள், புலிகளுக்கு அடுத்து சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிறப்பான செய்தி. விலங்குகளின் பாதுகாப்புக்காக பணியாற்றிவரும் அனைவருக்கும் பாராட்டுகள். நாம் இந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...