லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘மேற்குவங்கத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களைத் தாண்டாது’: பிரசாந்த் கிஷோர்

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களைத் தாண்டாது என தேர்தல் செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

News image
பிரசாந்த் கிஷோர்
Updated On :22 டிசம்பர் 2020, 10:57 am

DIN

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களைத் தாண்டாது என தேர்தல் செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது பிரசார பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல தேர்தல் செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆலோசகராக ஒப்பந்தமாகியுள்ள பிரசாந்த் கிஷோர், “ சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டப் போராடும். அவர்கள் 100 இடங்களுக்கும் குறைவாகவே பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது கணிப்பை விட அதிக இடங்களை பாஜக வென்றால் தான் தனது வேலையை விட்டு விடுவதாகத் தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர் அவ்வாறு 100க்கும் குறைவான இடங்களைப் பெற்றால் பாஜக தலைவர்கள் பதவி விலகுவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.