2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

‘அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு’: சரத் பவார்

மேற்கு வங்க மாநிலத்தின் மம்தா அரசை சீர்குலைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
‘மம்தா அரசை சீர்குலைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசு’: சரத் பவார்
Updated On :22 டிசம்பர் 2020, 6:44 am

DIN

மேற்கு வங்க மாநிலத்தின் மம்தா அரசை சீர்குலைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம் செல்லும் போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கு வங்க அரசின் உறுதித்தன்மையை சீர்குலைக்க முயன்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அரசின் ஒப்புதலின்றி மேற்கு வங்க அரசின் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவது குறித்து தனது கட்சியின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.