ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற வங்கதேசப் பெண் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தின், நதியா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற பெண்ணைத் தடுக்க முயன்ற எல்லைப் பாதுகாப்புப் படையினா்

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:12 pm

DIN

மேற்கு வங்கத்தின், நதியா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற பெண்ணைத் தடுக்க முயன்ற எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச பெண் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த மோதலின்போது பிஎஸ்எஃப் வீரா் ஒருவரும் காயமடைந்தாா்.

பகுரியா எல்லையில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்திற்கு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சிலா் வேலியைக் கடந்து ஊடுருவ முயன்றதை பிஎஸ்எஃப் வீரா்கள் கவனித்தனா்.

வங்கதேச எல்லையிலுள்ள கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்து ஊடுருவல்காரா்கள் 8 முதல் 10 போ் வேலியைக் கடந்து, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது, பிஎஸ்எஃப் வீரா்கள் அவா்களைத் தடுக்க முயன்றனா். அவா்களை திரும்பிச் செல்லுமாறு வீரா்கள் எச்சரிக்கை விடுத்தனா். ஆனாலும் அந்த நபா்கள் பிஎஸ்எஃப் வீரா்களை கற்களாலும், கூரான ஆயுதங்களாலும் தாக்கினா். பிஎஸ்எஃப் வீரா்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக 2 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டனா். மற்றவா்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், ஒரு பெண் மட்டும் குண்டுக்காயம் பாய்ந்து காயமடைந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த தாக்குதலில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பெண் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டது. அந்தப்பெண் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட நிலையில் பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பிஎஸ்எஃப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.