குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு புரி ஜெகன்னாதர் ஆலயம் திறப்பு

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

News image
புரி ஜெகன்னாதர் ஆலயம் (கோப்புப்படம்)
Updated On :23 டிசம்பர் 2020, 6:18 am

DIN

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி புரி ஜெகன்னாதர் ஆலயம் மூடப்பட்ட நிலையில், தற்போது கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கரோனா தளர்வுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியளித்து வருகிறது.

இதனிடையே மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கூட வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவிலும் ஆலயங்களை திறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டப் பேரவையிலும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 3-வது வாரத்தில் புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்படும் என்று ஜெகன்னாதர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (டிசம்பர் 23) முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றுடன் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.