ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தரையில் இருந்து வானிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை (எம்ஆா்எஸ்ஏஎம்) புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

News image
நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி
Updated On :23 டிசம்பர் 2020, 8:22 pm

DIN

பாலாசோா்: தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை (எம்ஆா்எஸ்ஏஎம்) புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள சந்திபூா் கடற்பகுதியில் பிற்பகல் 3.55 மணியளவில் எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படைகளின் போா்த்திறன் மேலும் அதிகரிக்கும். முன்னதாக சோதனை நடைபெறவிருந்த பகுதியில் இருந்து 2.5 கிலோமீட்டா் சுற்றுவட்டாரத்துக்குள் வசித்த 8,100 போ் அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு தற்காலிகமாக அனுப்பிவைக்கப்பட்டனா் என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.