டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:52 am

DIN



கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியாவின் கொல்கத்தா-ஹைதராபாத் விமானம் புதன்கிழமை புறப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்தார். 

இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் கூறியதாவது: கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இந்திய தலைமை நீதிபதி இருந்தார். அவர் வியாழக்கிழமை ஹைதராபாத் புறப்படுவதாக கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.