பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசின் பிடிவாதத்தால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது: கோபால் ராய்

அரசின் பிடிவாதத்தால் தில்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நீண்டுவருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் (கோப்புப்படம்)
Updated On :24 டிசம்பர் 2020, 10:11 am

DIN

அரசின் பிடிவாதத்தால் தில்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நீண்டுவருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, வேளாண் சட்டப் பிரச்னையில் அரசு சிக்கியுள்ளதாக உணர்கிறேன். அரசின் பிடிவாதத்தால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

எல்லையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் காலிஸ்தான்கள், நக்சல்கள், தீவிரவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். 

விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் உக்தி இனியும் பலனளிக்காது என்று கூறினார்.

தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 29-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.